புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2022ம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ம் திகதி இடம்பெவுள்ளது.அத்துடன் டிசம்பர் 05ம் திகதி ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.