மேலும் பலர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560949 ஆக அதிகரித்துள்ளது.இதேநேரம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 587596 ஆக பதிவாகியுள்ளது.இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14997 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.