காவல்துறையினரின் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தமையால் காவல் துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், கட்டுநாயக்க மடவல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.