அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களுக்கு இடையில் வலுக்கும் கண்டனம்

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது ஏறாவூர் காவல்நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) முன்வைக்கப்பட்டுள்ளது.

தேரர் சம்பவதினமான புதன்கிழமை மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்க அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தென் இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்து தமிழர்களை மிக வேதனைபடும் அளவிற்கு வார்த்தைகளை பிரயோகித்து பேசினார்.

மேலும், தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளது என தேரர் இவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த தேரர் இந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தமிழ்மக்களின் பூர்வீக இடங்களில் அத்துமீறி புத்தர் சிலையை வைப்பது தமிழர்களை அச்சுறுத்துவது போன்ற பல்வேறு விதமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.

எனவே, இவரை போன்றவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் கைது செய்து இனவாத முரண்பாட்டை தோற்றுவிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையநீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டி தருமாறு கோரி தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.