74 வருட கால அரசியல் முறையை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! அழைப்பு விடுத்த கே.டி

அரசாங்கத்தை விரட்டியடிப்பது இலகுவானது என்றாலும் 74 வருடகால அரசியல் முறையை விரட்டியடிப்பதே கஷ்டமானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

74 வருட கால அரசியல் முறையை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களை ஒன்று திரட்டி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதுதான் எமக்கு இருக்கும் உடனடியான பதில். அவர்கள் அதனை செய்வார்களா? இல்லை என்பதன் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டங்கள் நகரும். மக்கள் விரோத அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் நாம் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

74 வருட சாபத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசாங்கங்கங்களையும் அரச தலைவர்களையும் மக்கள் விரட்டியடித்துள்ளனர். அரசாங்கத்தை மாற்றுவது பெரிய காரியமல்ல எனவும் லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.