இரண்டாம் தவணைக்காக சகல பாடசாலைகளும் இன்று திறப்பு!

மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்த நிலையில் சகல பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன.21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்படவுள்ளனர்.அத்துடன், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாடசாலைகள் மீள திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் சுகாதார நலன் குறித்து அதிகளவில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.