அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போன்று திறப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது என்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் உணவை வீட்டிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அச்சமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.என்.சில்வா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கல்வித்துறைக்கு 100% தடுப்பூசி செலுத்தும் பணியை கல்வி அமைச்சகம் முடித்துள்ளது, எனவே அச்சப்பட தேவையில்லை என்றும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.