அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு!

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பப்கள், மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த தினத்தில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்றும் உள்துறை இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.உள்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்தவின் உத்தரவுடன் குறித்த அறிக்கையை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.