12ம் திகதிக்கு பின்னர் கோட்டாபய பதவியை இழக்க நேரிடும்-ஜோதிடர் ஆரூடம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார்.சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார்.நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.