இலங்கை ரஷ்யா இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீள ஆரம்பம்!

ஒக்டோபர் மாதம் 9ம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.