நடிகர் சரத்பாபு காலமானார்



பிரபல நடிகர் சரத்பாபு தனது 72ஆவது வயதில்  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் வைத்து இன்றைய தினம் (22.05.2023) காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் சரத் பாபு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்குச் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில்,  சரத்பாபு இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திரையுலகில் 50 வருடங்கள் 

சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாகத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

அவரது மறைவு திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.