ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை!

அனைத்து ரயில் மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாகப் பதிவாகும் ரயில் தாமதத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர்​ D.S.குணசிங்க தெரிவித்தார்.

உத்தேச திருத்தத்திற்கு அமைய ஒவ்வொரு ரயில் சேவை நேரத்திலும் 15 அல்லது 20 நிமிட மாற்றம் ஏற்படலாம் என அவர் கூறினார்.இந்த திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர்​ மேலும் தெரிவித்தார். இதற்கு முன்னர் கரையோர ரயில் மார்க்க நேர அட்டவணை திருத்தப்பட்டது.