உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக  வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை 22500 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து  மீட்கப்பட்டதாகவும் 18 நாடுகளைச் சேர்ந்த மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.