சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு!



பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுநீரக கடத்தல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலை நிர்வாகத்திடமும் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்களையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பதிவு செய்யவுள்ளனர்.

பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய பிரதான தரகர் இன்று (செவ்வாய்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

41 வயதான குறித்த சந்தேக நபர், கொழும்பு 15, கஜீமாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிறுநீரகப் பணத்தைக் கொடுக்கும் நபரையும், பெற்றுக்கொள்ளும் தரப்பையும் அவர் ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த தனியார் வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி உட்பட 06 பணிப்பாளர்களுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.