பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழப்பு

கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கைது செய்வதற்கான முயற்சியின் போது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யும் போது பொலிஸார் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த வழிகாட்டல் ஆலோசனைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது