வவுனியா கணேசபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.பண்டாரிக்குளத்தினை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் (வயது – 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவதோடு விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளான இளைஞர் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.