கண்டியில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட ஆண் போன்ற தோற்றத்தில் வந்த பெண்!

நாட்டில் பொது மக்களுக்கு எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மக்களிடம் நிதி சேகரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான காரணங்களை கூறி நிதி சேகரிப்பவர்கள் அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி அண்மையில் கண்டி - மடவளை பிரதேசத்திலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

மடவளையில் பெண் ஒருவர் ஆண் போன்ற தோற்றத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த போது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.