பாடசாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை..! கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நடவடிக்கையாக பாடசாலை நிர்வாகம் மற்றும் பிரதேச பொது அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுத்தன.

இதன்போது 10 மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் 15 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிடிபட்ட மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.