Hair Dryer மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் பலி


 

புத்தளத்தில் Hair Dryer எனப்படும் முடி உலர்த்தி  மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் நேற்றையதினம்(30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இத்துயர சம்பவம் நேற்றையதினம்(30) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் நேற்றையதினம்(30) காலை தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சார தாக்குதலுக்கு  உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து,  குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,அவர் அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம், ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இம்முறை இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.