தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..! வெளியாகிய பின்னணி

 

முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் சாரதி வாகனத்தை நிறுத்தாது ஓட்டிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் குதித்துள்ளார்.

வாகனத்தில் இருந்து மாணவர்கள் குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன்போது தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து , மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.