பரபரப்பான வீதியில் தரையிறங்கிய விமானம்



ஐரோப்பாவில் உள்ள லாட்வியா நாட்டில் சமீபத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

அடாஜி நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு சிறிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தை என்ஜின் பழுதானதால் விமானி உடனடியாக நெடுஞ்சாலையில் தரையிறக்கினார்.

அப்போது வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. பரபரப்பான வீதியில் விமானம் தரையிறங்கினாலும் அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.