உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! யார் இந்த பிரமுகர்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நபர் நேற்று (28) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் இருக்கும் நடைமுறைகளுக்கு அப்பால் எவ்வித பதிவுகளும் இன்றி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வெவ்வேறு வைத்தியசாலைகளிலிருந்து விசேட வைத்தியர்கள் குழுவொன்று அழைத்து வரப்பட்டு சிக்கிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரமுகர் தொடர்பில் தகவல் திரட்டிய சிங்கள ஊடமொன்று முன்னாள் கடற்படைத்தளபதி ஒருவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.