புகைப்படக் கலைஞரிடம் குட்டிகளைக் காட்டிய தாய் சிறுத்தை

செல்லப்பிராணிகள் பொதுவாக புதிதாகப் பிறந்த தன் குட்டிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் காட்டுவது வழக்கம். 

இவை தொடர்பான பல காணொளிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம். 

ஆனால் காட்டு மிருகங்கள் இதை அரிதாகவே செய்கின்றன. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காட்டுயிர் புகைப்படக் கலைஞர் ஒருவர் சிறுத்தையை புகைப்படம் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார். 

ஒரு தாய் சிறுத்தை அந்த புகைப்படக் கலைஞரை நோக்கி வந்து ஒலி எலிப்பியது. சிறிது நேரம் கழித்து அது தன் குட்டிகளை புகைப்படக் கலைஞரின் கேமரா முன் நிறுத்தியது. இந்த அரிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்க நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.


https://media2.getlokalapp.com//production-lokalapp-1312163145/videos/12473385/12473385_12473168_ssstwitter.com_1706185611390_transcode_1227805_transcode_1227805.mp4