வாக்குவாதம் முற்றியதால் நடுவீதியில் வைத்து குத்தி கொலைசெய்யப்பட்ட நபர்

மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று இரவு மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த கபில பொன்சேகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தகராறு முற்றிய நிலையில் கபில என்ற நபரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.