சற்று முன்னர் தென்னிலங்கையில் முற்றுகைக்குத் தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்கள்!!

மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சற்று முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.

மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.