கனடாவில் வீடொன்றில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பினை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதன்போது,மீட்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு ஒன்பது அடி நீளமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டில் தனிச்சிறப்புடைய விலங்கினங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராட்சத மலைப் பாம்பினை வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது.