பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் தீ விபத்து!

கொழும்பு, பொரளை – கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகரசபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருந்தன.இதனையடுத்து, தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.