வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல்!

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இந்த தீப்பரவலால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.