அண்மைகாலமாக வீதிகளில் மாடுகள் சண்டையிடுவது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது, பொதுமக்களை தாக்குவது என பல செய்திகளை நாம் படித்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் வீதியில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
அப்போது அங்கு வந்த நாய் ஒன்று, "ரெண்டு பேரும் முதல்ல சண்டையை நிறுத்துங்க" என்பதுபோல் நீண்ட நேரம் போராடி மாடுகளுக்கிடையேயான சண்டையை விலக்கிவிட்டு சென்றது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.