அளுத்கம பிரதேசத்தில் கார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கார் விற்பனை நிலையங்கள் சைக்கிள் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளன.

அதேவேளை கார் விற்பனை செய்யும் இடத்தில் கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல மாதங்களாக எந்த வாடிக்கையாளரும் அவற்றினை வாங்குவதற்கோ அல்லது அவற்றின் விலையைக் கேட்பதற்கோ வரவில்லை என்று விற்பனை  நிலையத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சைக்கிள்களின் விலை ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான விற்பனை நிலையங்களில் சைக்கிள்களின் தற்போதைய விலை தொடர்பில் விசாரிப்பதற்காக இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.