மகிந்தவின் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் பேரழிவு! ஜாதகத்தில் வெளியான பசிலின் மறுபக்கம்

நாங்கள் சிங்கங்கள். எம்மீது கல் எறியவேண்டாம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.

இதன்படி யார் நாய், யார் சிங்கம் என்பது தேர்தல் நாளில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பசில் தெரிவித்த கருத்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமைந்துள்ளது என்றும் சஜின் வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியும் தேசம் அல்ல. எனவே, தேர்தல் நாளில் யார் நாய், யார் சிங்கம் என்று பார்க்கலாம் என்றும் சஜின் வாஸ் குணவர்தன சவால் விட்டார்.

2001ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடரிடம் மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்தைப் பார்க்கச் சென்றேன். வேண்டுமானால் மகிந்த ராஜபக்சவிடம் கேட்கலாம். அவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு ராஜபக்ச வந்து ஒட்டுமொத்த தலைமுறையின் நற்பெயரை அழித்துவிடுவார் என்றார்.

அது கோட்டாபய ராஜபக்ச பற்றி அல்ல. பசில் ராஜபக்ச பற்றியது என்றும் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.