யாழ் மிருசுவிலில் குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையில் இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் மனைவி, பிள்ளையை காணவில்லை என கணவன் தேடி வந்த நிலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது.
தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலில் தாயின் சடலமும் கிணற்றில் இருந்தமை கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.