யாழில் வாள்வெட்டு - படுகாயமடைந்த 27 வயது இளைஞன்


சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மிருசுவில் உள்ள உணவகமொன்றில் நேற்று இரவு உணவு எடுப்பதற்காக சென்றவேளை வாளால் வெட்டப்பட்டுள்ளார்.

பாலாவி,கொடிகாமத்தை சேர்ந்த 27 வயதான ஒருவரே கால் கையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.