மூளை நரம்பு வெடித்து 22 வயதுடைய இளைஞன் யாழில் உயிரிழப்பு...!

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் யாழில் உயிரிழந்துள்ளார்.

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், மூளை நரம்பு வெடித்தமை காரணமாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார் .

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியாமையால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.