தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி 17 வயது பாடசாலை சிறுமி எடுத்த விபரீத முடிவு!

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்குப் பின்னால் நேற்று குறித்த மாணவி தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்டி பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பிட்டிய கல்தன்ன பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி நேற்று காலை வீட்டில் இருந்து தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக கூறி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.