யாழில் கரையொதுங்கிய 14 அடி நீளமுடைய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் (11) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் நீளம் சுமார் 14 அடி என கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த டொல்பின் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.