7 தமிழர்கள் ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சம்


இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள நான்காவது தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர்.  இந்த 7 பேரையும் இந்திய கரையோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுள்ளனர்.