கொழும்பின் சில பகுதிகளில் 7 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 7 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.குறித்த பிரதேசங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான காலப்பகுதியிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.