694 உக்ரைன் போராளிகள் ரஷ்யாவிடம் சரணடைவு!

694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை முதல் தொழிற்சாலையில் தங்கியிருந்த மொத்தம் 959 போராளிகள் சரணடைந்துள்ளனர்.அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.