கந்தகாடு முகாமிலிருந்து 500 பேர் தப்பியோட்டம்

வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600  பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்கும் முகாம் ஒன்று அங்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், இரதரப்பினருக்கிடையில் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே பலர் தப்பியோடியுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.