இரு மாதங்களில் வீதி விபத்துக்களால் 457 பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதிவிபத்துக்களில், 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதில் 177 உந்துருளி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற 43 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.