40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்வு!

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.இவர்களில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அடங்குகின்றனர்.சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.