யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட அரச பேருந்தில் 4 கிலோ கஞ்சா!

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.   

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி - பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூநகரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.