2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் நிறைவிற்கு வந்துள்ளது.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமானது
இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 40 வேட்பாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது
அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று காலை கையளித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பென்சேகா, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
மேலும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்தார்.
அதேநேரம், தமிழ்ப் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதேநேரம் வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேலதிக ஒருமணித்தியால காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மூன்றும் தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர் சரத் குமார குணரத்ன வேட்புமனு பத்திரத்தை சமர்பிக்கவில்லை.
இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க உத்தியோகபூர்வமான அறிவித்தார்.
வேட்பாளர் ஒருவருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரசாரங்களை மேற்கொள்வதை சிவில் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீதியான முறையில் தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்; கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும்.
தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரசாரங்களை மேற்கொள்வதை சிவில் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீதியான முறையில் தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர்; கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும்.
தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இதேநேரம் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்கு 3 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.