கனடாவில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

 கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் சுமார் 8170 மில்லியன் இலங்கை ரூபா பணப்பரிசை வென்றெடுத்துள்ளார்.

ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்பவரே இந்த பணப்பரிசை வென்றவராவார்.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் ஜயசிங்க 35 மில்லியன் கனேடிய டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார்.

கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்பவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜாக்பொட் பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் றொரான்டோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.

மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் கார் கொள்வனவு செய்யவும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் தாம் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.