சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 33 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு கடல்வழியாக வெளியேற முயன்ற 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு கடற்படையினரால் இன்றைய தினம் குறித்த 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அண்மைக்காலமாக இவ்வாறு நாட்டை விட்டு கடல் மார்க்கமாக வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.