9வது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு!

9வது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.ஆரம்ப நிகழ்வாக முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து குறித்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.