ஜூலை 1ஆம் திகதி எல்.பி.எல். ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள 5ஆவது லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டிகள் கொழும்பு, தம்புள்ளை மற்றும் கண்டியில் நடத்தப்படவுள்ளன.

ஜூலை 1 ஆம் திகதி முதல் நாளில் ஆரம்ப நிகழ்வுடன் நடப்புச் சம்பியன் கண்டி மற்றும் தம்புள்ளை அணிகள் மோதவுள்ளன. ஜூலை 16 ஆம் திகதி வரை நடைபெறும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் போட்டியிடும் ஐந்து அணிகளும் தலா 4 போட்டிகளிலும் ஆடும்.

இதனைத் தொடர்ந்து முதலாம் தகுதிச் சுற்றுப் போட்டி ஜூலை 18 ஆம் திகதி நடைபெறுவதோடு ஜூலை 20 ஆம் திகதி இரண்டாவது தகுதிப் போட்டியில் இடம்பெறும்.

ஜூலை 21 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுவுள்ள நிலையில் ஜூலை 22 ஆம் திகதி மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.