கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) காலை 8 மணி முதல் நாளையதினம் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, தெஹிவளை, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கும் ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கும் உரிய காலத்தில் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.