வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவில் 15 தங்கப்பவுண் நகை திருட்டு!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.இதற்கமைய நேற்றிரவு கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் 15 தங்கப்பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை தமது நகைகள் மற்றும் பணம் தொடர்பில் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.